கவிதை - Poems



தி. ரம்யாவின் கவிதை

தன்னம்பிக்கை

துக்கத்தின் தூக்குக்கயிறு
உன் வாழ்வின் கழித்தை
இறுக்குகிறதா...?
இடிந்து போகாதே
உன் இதயத்தின்
அரண்மனையில்
நன்றாகத் தேடிப்பார்
எந்குகேயாவது ஒளிந்திருக்கும்
உன் தன்னம்பிக்கை வாள்

அந்த வாளை கையிலெடுத்து
துக்கக் கயிற்றின் கழித்தறுத்து
உன் வாழ்வை நிலை நிறுத்து
முயற்சியை முன் வைத்து
முதன்மையாய் நீ உழைத்து
நம் மானுட வாழ்வில்
புது நம்பிக்கையை
நீ புகுத்து!

நல் வழ்வின்
வழிமுறையை வகுத்து
உன்னால் பிறருக்கு
ஒளி தரும் கிழக்கு

உன் தன்னம்பிக்கை
மற்றவர்க்கும் உதாரணம்
உன் தன்னம்பிக்கைக்கு முன்
மற்ற அனைத்து தடைகளுமே
சாதாரணம்!

- தி ரம்யா

திறமை உண்டு!

திறமை உண்டு உனக்குள
எண்ணிப்பாரு உன் மனத்துள்!
வருமை வந்தால் - நீ
வாடிப்போகாதே
உனக்குள் திறமை இருப்பதை
நீ மறந்து போகாதே!

உனக்குள்ளும் உண்டு திறமை
அதை வெளிக்கொண்டு வர
வருவதே வறுமை!
சோம்பலே உன் வாழ்வில்
சிறுமை!

சுறுசுறுப்பாக
நீ இருந்தால
உன் வாழ்வில் ஏது கருமை!

உனக்குள் உள்ள
நல்ல திறமைகளை
வெளியில் கொண்டுவர
முயற்சிஎடு!

என்க்கும் உன்டு
"திறமை" என்று
சபதம் விடு!
நம் பாரதத்தில்
நீ உயர்ந்திடு!

"திறமை"
உன்க்குள்ளூம் உண்டு
என்பனத நீயும்
உணர்ந்திடு!

- தி ரம்ய

அய்யப்பன் மகாராஜன் கவிதை

நீண்ட மரங்களின் மீது நான்

நீண்ட மரங்களின் மீது அமர்ந்திருக்கிறேன்
அசையும் கால்களைக் கொண்டு

கவிதை போல ஒன்று தேவைப்படுகிறது
வடிவ பாவம் ஒன்றும்
தலைச்சுமைக்கருகில் ஏறவில்லை

அசையும் கால்களுக்கும் பூமிக்குமிடையே
ஓடிக்கொண்டிருக்கிறது
திசை

காற்றைப்போலவே மிருதுவாக இருக்குமோ
என் கவிதையின் விசை

சட்டென்றெங்கோ பெயர்ந்து
கிளை பரப்பி வருகிறது
ஆங்காரத்துடன் காற்று

வீசியெறியப்படுகிறேன்

காற்றின் உயரத்தில் வைத்து
வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது
மனசு

மரங்களின் மண்டையில் மோதி
தாக்குறும் கணத்தில்
தலைக்குப்புற பூமிக்கு வருகிறேன்

சாவகாசமாக முணுமுணுத்தபடி

ஊர்ந்து செல்கிறது
அட்டைப்பூச்சி
வரும் எனது நெற்றிக்கு
நேர் கீழே

நீண்ட மரங்களின் மீதர்ந்திருக்கிறேன்
உயிர்பிடித்து நிற்கின்றன
உயரமான மரங்கள்

- அய்யப்பன் மகாராஜன்

மா. தமிழ்ப்பரிதி ஐக்கூ
  • பாறைக்கருகே
    தயங்கி நிற்கின்றன
    இளம் ஆல விழுதுகள்

  • வேகமாய் ஆடும் வேம்பு
    கண்ணாடியறைக்குள்
    சுழலும் மின்விசிறி

  • ஆளுங்கட்சி, எதிர்கட்சி
    பொதுக்கூட்டம்
    திருட்டு மின்சாரத்தில்

  • வந்து செல்லும்
    பழகிய திருடன்
    உறங்கும் நாய்

  • சாலை விரிவாக்கம்
    சாய்த்த மரங்களில்
    கூடு தேடும் குருவிகள்

இரா.அ.அறிவுமதி ஐக்கூ
  • ஒன்றும் தெரியாமல்
    இலையைத்தின்கிறது
    கறிக்கடையில் ஆடு

  • தாமரை இலை
    உருண்டோடும் நீர்த்துளி
    நிற்கத்தெரியவில்லை

  • அம்மாவின் அரிசிக்கோலம்
    எறும்புகளின் ஊடுருவல்
    புதிய ஓவியம்

  • வேகமான காற்று
    அடித்து செல்லப்பட்ட மண்
    புதிய இடத்திற்கு

  • மாலைப்பொழுது
    சிவந்த வானம்
    கதிரவன் இல்லை

  • வேலையில்லா பட்டத்தாரி
    அடிக்கடி வேலை
    நேர்காணல் நேர்காணல்



Bookmark and Share   Lunarpages Affiliate Program