எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
- பாவேந்தர் பாரதிதாசன் 
 இல்லம் | எங்களைப்பற்றி | அறிவிப்புகள் | தொடர்புக்கு | தமிழ் நட்பகம் | வரி விளம்பரங்கள் | உதவி |
கவிதை
அய்யப்பன் மகாராஜன் கவிதை

நீண்ட மரங்களின் மீது நான்

நீண்ட மரங்களின் மீது அமர்ந்திருக்கிறேன்
அசையும் கால்களைக் கொண்டு

கவிதை போல ஒன்று தேவைப்படுகிறது
வடிவ பாவம் ஒன்றும்
தலைச்சுமைக்கருகில் ஏறவில்லை

அசையும் கால்களுக்கும் பூமிக்குமிடையே
ஓடிக்கொண்டிருக்கிறது
திசை

காற்றைப்போலவே மிருதுவாக இருக்குமோ
என் கவிதையின் விசை

சட்டென்றெங்கோ பெயர்ந்து
கிளை பரப்பி வருகிறது
ஆங்காரத்துடன் காற்று

வீசியெறியப்படுகிறேன்

காற்றின் உயரத்தில் வைத்து
வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது
மனசு

மரங்களின் மண்டையில் மோதி
தாக்குறும் கணத்தில்
தலைக்குப்புற பூமிக்கு வருகிறேன்

சாவகாசமாக முணுமுணுத்தபடி

ஊர்ந்து செல்கிறது
அட்டைப்பூச்சி
வரும் எனது நெற்றிக்கு
நேர் கீழே

நீண்ட மரங்களின் மீதர்ந்திருக்கிறேன்
உயிர்பிடித்து நிற்கின்றன
உயரமான மரங்கள்

- அய்யப்பன் மகாராஜன்

மா. தமிழ்ப்பரிதி ஐக்கூ
  • பாறைக்கருகே
    தயங்கி நிற்கின்றன
    இளம் ஆல விழுதுகள்

  • வேகமாய் ஆடும் வேம்பு
    கண்ணாடியறைக்குள்
    சுழலும் மின்விசிறி

  • ஆளுங்கட்சி, எதிர்கட்சி
    பொதுக்கூட்டம்
    திருட்டு மின்சாரத்தில்

  • வந்து செல்லும்
    பழகிய திருடன்
    உறங்கும் நாய்

  • சாலை விரிவாக்கம்
    சாய்த்த மரங்களில்
    கூடு தேடும் குருவிகள்

இரா.அ.அறிவுமதி ஐக்கூ
  • ஒன்றும் தெரியாமல்
    இலையைத்தின்கிறது
    கறிக்கடையில் ஆடு

  • தாமரை இலை
    உருண்டோடும் நீர்த்துளி
    நிற்கத்தெரியவில்லை

  • அம்மாவின் அரிசிக்கோலம்
    எறும்புகளின் ஊடுருவல்
    புதிய ஓவியம்

  • வேகமான காற்று
    அடித்து செல்லப்பட்ட மண்
    புதிய இடத்திற்கு

  • மாலைப்பொழுது
    சிவந்த வானம்
    கதிரவன் இல்லை

  • வேலையில்லா பட்டத்தாரி
    அடிக்கடி வேலை
    நேர்காணல் நேர்காணல்

வந்த பாதை

தமிழ் நூலகம்

தமிழ்த்தளங்கள்

திரைப்படங்கள்

இணைப்புகள்

பிற தளங்கள்


© Thamizhagam Net 2007