தகவல் பெறும் உரிமை
நூலின் பெயர்: தகவல் பெறும் உரிமை
ஆசிரியர்: இரா.சுப்பிரமணி
முதற்பதிப்பு: டிசம்பர் 2005
வெளியீடு: பொன்னி,2/1785, சாரதி நகர், என்ஃபீல்டு அவென்யூ, மடிப்பாக்கம், சென்னை-600091,
நூல் விலை: உரு.35/-
|
எந்த ஆட்சி மாறினாலும், ஊழல் தொடரும். அளவும் தரமும் மட்டுமே வேறுபடும் என்ற நிலையை அடைந்துவிட்டது நமது அரசியல் அமைப்பு. சுற்றுச்சூழல் பாதிப்பிலும் பயங்கரவாதப் பெருக்கத்திலும் ஊழலுக்கு முக்கியமான் பங்கு உள்ளது. இதை மாற்றியமைக்கா விட்டால், எதிர்கால தலைமுறைகள் தொடர்ந்து இடர்ப்படுவது உறுதி.
இந்தப் போராட்டத்தில் கிட்டியிருக்கும் புதிய ஆயுதமான தகவலறியும் உரிமைச் சட்டம் பற்றிய இந்த நூல், மனித சமுத்துவம், மனித உரிமை, பொதுவாழ்விலும் தனி வாழ்விலும் நேர்மை முதலியவற்றை விழையும் ஒவ்வொருவருக்கும் பயன்படும் அரிய வரவு என்பதில் துளியும் சந்தேகமில்லை.
அறிமுகவுரையில் -ஞாநி
இன்றைக்கு நடைமுறைக்கு வந்திருக்கும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் மக்கள் கையில் கிடைத்திருக்கும் ஓர் அரிய சட்ட ஆயுதம்.
இதன் மூலம் ஆட்சியாளர்களையும் அதிகாரிகளையும் அவர்களின் திட்டங்களையும் அவை நடைய்றைப்படுத்தப்படும் விதங்களையும் மக்கள் கண்காணிக்க முடியும்.
இச்சட்டப்படி அரசுத் துறைசார்ந்த தகவல்களை கேட்டுப்பெற்று அதனை ஆய்வு செய்து திட்டங்களை நிறைவேற்றியவர்களையும் அதற்கு ஒப்புதல் அளித்த அதிகாரிகளையும் நாம் கேள்வி கேட்க முடியும்.

|